பா.ராஜாராம் அவர்களின் வேண்டுகோளூக்கிணங்க
http://karuvelanizhal.blogspot.com/
நேற்று நடந்தது போல் உள்ளது
நன்றாக படித்தால் நல்ல எதிர்காலம்
என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்
உன் எதிர்காலம் உன் கையில்
என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்
இப்படி தன் சுயநலம் இல்லாமல்
மாணவர்களின் பொது நலதிற்காக
பாடுபட்ட ஆசிரியர்கள்
நேற்று நடந்தது போல் உள்ளது
மூக்கொழுகி தலையில் எண்ணை ஒழுகி
வீட்டு பாடத்தை தவிர வேறு கவலை இன்றி
நேற்று நடந்தது போல் உள்ளது
குச்சிஐஸ் விற்கும் தாத்தா
வெள்ளரிபிஞ்சில் உப்பும் மிளகாய்த்தூளும்
தடவி விற்கும் பாட்டி
நேற்று நடந்தது போல் உள்ளது
போனால் மூவரும் பள்ளி அறை இல்லை
என்றால் மூவருக்கும் வயிற்றுவலி
நல்ல நண்பர்கள்
நேற்று நடந்தது போல் உள்ளது