என் பாட்டியை எனக்கு ரொம்பபிடிக்கும் நாங்கள் எல்லோரும் அவர்களை மூமா என்றே அழைப்போம்
எவ்வலவு கோவமாக இருந்தாலும் கடுஞ்சொல் அவர்கள் சொன்னது இல்லை.
அவர்கள் உபயோகித்த கோவச்சொல் இரண்டுதான்
ஒன்று அட நீ நல்லாஇருக்க ஏன்டா இப்படிப்பன்றேம்பாங்க
மற்றொன்று அடி ஒந்தாலியகெட்ட என்பார்கள் கோவத்தில் கூட வாழ்த்தும் என் பாட்டியை எனக்கு ரொம்பப்பிடிக்கும்.
சரி இப்ப எதர்க்கு இது.
வலைப்பதிவில் தனிமனித வாய்க்கால் தகறாறும் மதம் என்ற வரப்பு தகறாறும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.
நடுநிலையாளர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப்பார்த்துக்கொண்டிறுக்கிறார்கள்.
சொல்லவே நா கூசும் வார்த்தைகள்.
கேட்கவே செவி சிவக்கும் சொல்லாடல்கள்.
விமர்ச்சனம் என்ற பெயரில் நாகரிகம் அற்ற மொழியாடல்.
வேண்டாமே இவையெல்லாம்.
வார்த்தையில் அழகானதைச்சொல்லிப்பழகுவோம்.