Pages

Saturday, July 31, 2010

முகம் தேடி.


நான் இன்னாறின் மகன் 
என்று அறியப்பட்டேன்
என் தந்தைக்கு பெருமை


நான் இன்னாறின் தந்தை
என்று அறியப்பட்டேன்
என் மகனுக்கு பெருமை


நான் நானாக அறியப்படுவது
எப்பொழுது.

12 comments:

அ.முத்து பிரகாஷ் said...

உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை யுவர் ஹானர் ...

இருந்தாலும் ...

முன்முடிவற்ற பதில்களின்றி சுயமான சொந்த கேள்விகள் தரும் பதில்கள் அதன் பின்னர் கேள்விகள் என தொடர்கையில் நான் நானை காணக் கூடும் ...

அப்புறம் ...
தோழர் செந்திலுக்கு நீங்கள் அனுப்பிய வீடியோவிற்கு நன்றிகள் !

Unknown said...

nice

Unknown said...

கண்டிப்பாக ஒரு நாள் அறிவீர்கள் நண்பா...

ஹேமா said...

மனம் பக்குவம் பட்ட பின்பு அல்லது
இறந்த பின்பு என்று நினைக்கிறேன் !

சிநேகிதன் அக்பர் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை. கண்டிப்பாக ஒருநாள் அறியப்படுவோம்.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

செ.சரவணக்குமார் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்.

தூயவனின் அடிமை said...

என்றைக்கு நாம் நாமாக இருக்கின்றோமோ அன்று நிச்சயம் அறியபடுவிர்கள்.

- இரவீ - said...

u r already ! y doubt ?

ஸாதிகா said...

எப்பொழுதும் நாம் நாம்தான்.

ராஜவம்சம் said...

வந்து கருத்தும் வாழ்த்தும் சொன்ன அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் கோடி.

Anisha Yunus said...

ரொம்ப சின்ன விஷயம் அண்ணா,

உங்களுடைய ஈகோவை கிளறும் விதமாக...அது உங்கள் மனைவியாகட்டும், பிள்ளைகளாகட்டும், நடந்து கொள்ளும்போது தோன்றும் ஓர் எண்ணமே உங்களை நீங்கள் யாராக கற்பனை செய்து கொண்டு வாழ்கிறீர்கள் என காட்டும்!! சரியா?

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை